/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏப்.30க்குள் சொத்துவரி செலுத்தினால் சலுகை
/
ஏப்.30க்குள் சொத்துவரி செலுத்தினால் சலுகை
ADDED : ஏப் 06, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா உத்தரவின்பேரில் 100 வார்டுகளிலும் சொத்துவரி வசூலில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காக வரி வசூல் சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2025-- 26க்கான சொத்து வரியை ஏப்.,30க்குள் முழுவதும் செலுத்தினால் 5 சதவீதம் (அதிகபட்சம் ரூ.5000) சலுகை வழங்கப்படும். இதற்காக வரி வசூல் மையங்கள் (அரசு விடுமுறை தவிர) ஏப்ரல் முழுவதும் சனி, ஞாயிறுகளில் செயல்படும்.

