/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருதுார் டவுன் பஞ்.,ல் 13 தீர்மானம் நிறைவேற்றம்
/
மருதுார் டவுன் பஞ்.,ல் 13 தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : டிச 19, 2025 05:51 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., மேட்டு மருதுார் சமுதாய கூடத்தில், நேற்று முன்தினம் சாதாரண கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு துணைத் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.அலுவலக பணியாளர் முத்துக்குமார் தீர்மானங்-களை வாசித்தார். டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்களுக்கு, நாள்தோறும் ஒரு வேளை காலை உணவு வழங்க வேண்டும்.
டவுன் பஞ்சாயத்தில், அரசு அறிவிக்கும் திட்டங்-களை
நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்னுரிமை அடிப்-படையில், பல்வேறு பணிகள் மேற்கொள்ள பணிகள் தேர்வு செய்தல் உள்ளிட்ட 13 தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர்கள், சுகாதார மேற்பார்வையாளர் பாக்-கியம், இளநிலை உதவியாளர் விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

