/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கபாலீஸ்வரர் கோவில் ஆருத்ரா விழா துவக்கம்
/
கபாலீஸ்வரர் கோவில் ஆருத்ரா விழா துவக்கம்
ADDED : டிச 27, 2025 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடப்பாண்டு ஆருத்ரா தரிசன விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்-துடன் துவங்கியது. அதன்பின் திருவெம்பாவை உற்சவம் ஆரம்-பிக்கப்பட்டு, ஜன.,1ம் தேதி வரை நடக்கவுள்ளது.
ஜன., 2-ம் தேதி பிச்சாண்டவர் வீதியுலா, ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 3ம் தேதி மூலவருக்கு நெய் அபிஷேகம், சிவகாமி அம்பிகா சமேத நடராஜருக்கு ஆருத்ர அபி-ஷேகம் செய்து வெள்ளி ரதத்தில் திருவீதி உலா நடக்கிறது. சோமாஸ்கந்தர் ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகி-றது.

