ADDED : டிச 29, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நாளை (டிச.30) அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
முன்னதாக அதிகாலை 4:00 மணி துவங்கி திருமஞ்சனம், உஷகால பூஜை, ஆழ்வார் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.
தொடர்ந்து காலை 7:00 மணியளவில் கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. தென்னம்பட்டி அருள்மலை ஆதிநாதபெருமாள், துாங்கனம்பட்டி வெங்கடேசப் பெருமாள், மண்டபம்புதுார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட பல பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

