sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 'கொடை' யில் உறை பனி; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

/

 'கொடை' யில் உறை பனி; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 'கொடை' யில் உறை பனி; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 'கொடை' யில் உறை பனி; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

1


ADDED : டிச 22, 2025 09:49 AM

Google News

ADDED : டிச 22, 2025 09:49 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உறைபனி நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை சரி வர பெய்யாத நிலையில் கடந்த மாதம் முன் பனிக்காலம் துவங்கியது. சில நாட்களாக மதியத்திற்குப் பின் பனியின் தாக்கம் அதிகரித்து வெட, வெடக்கும் குளிர் நிலவுகிறது. பகலில் 24 டிகிரி செல்சியஸ், இரவில் குறைந்தபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது.

ஏரி, பிரையன்ட் பூங்கா, ஜிம்கானா, அப்சர்வேட்டரி, கீழ்பூமி மன்னவனூர் பகுதிகளில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

கொடைக்கானல் கோக்கர்ஸ்வாக் பகுதியிலிருந்து தெரியும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட நகரங்களில் மூடுபனி நிலவுகிறது. எதிர் வரும் சில நாட்களில் கடும் உறை பனிப்பொழிவு நிலவும் என வானிலை மையத் தினர் தெரிவித்தனர்.

தற்போதைய பனியால் சரும வெடிப்புகள் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் குளிரை தாங்கும் ஆயத்த ஆடைகளின் விற்பனையும் அதிகரித்து உள்ளது.

மதியம் 3:00 மணிக்கு பின் துவங்கும் பனியின் தாக்கம் மறுநாள் காலை 11:00 மணி வரை நீடிக்கிறது. வழக்கத்திற்கு மாறான பனியின் தாக்கத்தால் பொதுமக்கள் செய்வதறியாது தவிக் கின்றனர்.






      Dinamalar
      Follow us