sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

உதிரும் இலைகள்: குப்பையை புகலிடமாக்கும் விஷ பூச்சிகள்

/

உதிரும் இலைகள்: குப்பையை புகலிடமாக்கும் விஷ பூச்சிகள்

உதிரும் இலைகள்: குப்பையை புகலிடமாக்கும் விஷ பூச்சிகள்

உதிரும் இலைகள்: குப்பையை புகலிடமாக்கும் விஷ பூச்சிகள்


ADDED : ஏப் 04, 2024 11:47 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முறையாக நிறுத்துங்க

திண்டுக்கல் சாலை ரோட்டில் டூவீலர்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வங்கிக்கு ஏராளமானோர் வந்து செல்வதால் வாகனங்களை முறையாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மகேந்திரன், திண்டுக்கல்.

............--------மின்கம்ப உச்சிவரை செடிகள்

வடமதுரை சிட்டம்பட்டியில் சுகாதார வளாகம் அருகில் இருக்கும் மின்கம்பத்தின் உச்சிவரை செடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன. இதில் ஏறும் தேவாங்கு பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனை மின்வாரியத்தினர் அகற்ற வேண்டும். -செந்தில்நாதன், வடமதுரை.

..........--------சாலையை ஆக்கிரமித்து சந்தை

கோபால்பட்டியில் சனிக்கிழமை ஆடு,கோழி சந்தை சாலையை ஆக்கிரமித்து நடக்கிறது. பலநுாறு பேர் சாலையை ஆக்கிரமித்து கூடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து நடக்க வாய்ப்புள்ளது. சந்தையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். தனபால், வீரசின்னம்பட்டி.

............---------சேதத்தில் மின் இயக்கி பெட்டி

கொடைக்கானல் அண்ணா சாலையில் உள்ள உயர் மின் கோபுர விளக்கு மின் இயக்கி பெட்டி சேதமடைந்து விபத்து ஏற்படுவதாக உள்ளது. புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகன், கொடைக்கானல்.

..................----------கலெக்டர் அலுவலகத்தில் குப்பை

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக பூங்காவில் மரத்தில் இருந்து உதிர்ந்த இலைகள் குவிந்து உள்ளது .இனால் கொசுக்கள் உற்பத்தியாகி பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தங்குமிடமாக உள்ளது. குவித்து வைக்கப்பட்ட இலைகளை அகற்ற வேண்டும். ரவிகுமார், செட்டிநாயக்கன்பட்டி.

...............-----------ரோட்டில் கோழி கழிவுகள்

திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் கோழி கழிவுகள் கொட்டுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது .வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். ரோடு வரை சிதறி கிடப்பதால் இதனை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்னேஷ், திண்டுக்கல்.

.................-----------கழிவுநீர் தேக்கத்தால் சுகாதாரக் கேடு

திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி செல்லும் ரோடு அருகே கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது . கழிவுநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பிகா, திண்டுக்கல்.

....................






      Dinamalar
      Follow us