/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெருமாள் கோயிலில் ஆவணி விழா திருக்கல்யாணம்
/
பெருமாள் கோயிலில் ஆவணி விழா திருக்கல்யாணம்
ADDED : செப் 09, 2025 04:39 AM

பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழா திருக்கல்யாணம் நடந்தது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்ஸவ விழா செப்.2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
செப்.1 2 வரை நடக்கும் விழாவில் நேற்று மாலை அகோபில வரதராஜ சுவாமிக்கு திருக்கல்யாணம் மாலை மாற்றுதல், கோத்திரம் கூறுதல் நடைபெற்றது. பக்தர்கள் பாடல்கள் பாடி, ராம நாமம் ஜபித்து கலந்து கொண்டனர். இன்று இரவு பாரிவேட்டை, செப். 10 காலை 7:00 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.