/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரும் 4, 5ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்
/
வரும் 4, 5ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்
வரும் 4, 5ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்
வரும் 4, 5ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்
ADDED : ஜன 01, 2026 03:59 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன்கார்டுதாரர்களுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ், வரும் 4, 5 ஆகிய தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி ரேஷன் கார்டு தாரர்களின் நலன்கருதி, அவர்களின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கடலுார் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில், 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நாளில் பொருட்களை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

