sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வேளாண் மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் துவக்கம்

/

 வேளாண் மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் துவக்கம்

 வேளாண் மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் துவக்கம்

 வேளாண் மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் துவக்கம்


ADDED : டிச 28, 2025 06:10 AM

Google News

ADDED : டிச 28, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் இறுதியாண்டு மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் துவக்க விழா நடந்தது.

குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள வெங்கடாம்பேட்டை கிராமத்தில் வேளாண் இறுதியாண்டு மாணவர்கள் தங்கி பயிற்சி பெறும், ஊரக வேளாண் பணி அனுபவ திட்ட துவக்க விழா நடந்தது. துறை தலைவர் தமிழ்செல்வி, திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜா, குழு ஆசிரியர் காளிதாஸ் வழிகாட்டுதல்படி, வெங்கடாம்பேட்டை ஊராட்சி தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவிற்கு மாணவ குழு தலைவர் ஹரிஷ் துவக்க உரையாற்றினார். குறிஞ்சிப்பாடி தி.மு.க., ஒன்றிய செயலாளர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.

இத்திட்டத்தின் நோக்கம், சிறப்பம்சங்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து வேளாண் மாணவர்கள் ஹரிஷ்ராம், ஹர்ஷவர்தன், ஹேம்நாத், இன்பத்தமிழன், அய்யப்பன், ஜெய்பிரகாஷ், ஜனார்த்தனன், ஜாசிம், ஜெயகார்த்திக் விளக்கி பேசினர். விவசாயிகள் சண்முகம், அன்பழகன், செல்லக்கண்ணு, மணிகண்டன், வீரப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவர் குழு துணை தலைவர் ஹர்ஷக் மற்றும் ஹரிஷ் செல்வம் நன்றி கூறினர். தொடர்ந்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us