/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புறநகரில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு; தனிப்படை கண்காணிப்பு பலப்படுத்தப்படுமா?
/
புறநகரில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு; தனிப்படை கண்காணிப்பு பலப்படுத்தப்படுமா?
புறநகரில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு; தனிப்படை கண்காணிப்பு பலப்படுத்தப்படுமா?
புறநகரில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு; தனிப்படை கண்காணிப்பு பலப்படுத்தப்படுமா?
ADDED : செப் 18, 2025 10:33 PM

தொண்டாமுத்துார்; போலீஸ் தனிப்படைகள் செயல்படாததால், கோவை புறநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பழக்கம் அதிகரித்துள்ளது.
கல்லுாரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் என அனைத்திலும் கோவை முன்னிலையில் உள்ளது. மாநகரை விட, புறநகர் பகுதிகளில், கல்லுாரிகள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன.
இதன் காரணமாக, கோவை புறநகர் பகுதிகளில், வெளிமாவட்டம், வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.
சமீபகாலமாக, கல்லுாரி மாணவர்கள் மட்டுமின்றி, வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் அதிக அளவில் போதை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர், இளைஞர்களை குறி வைத்தே போதைப்பொருள் விற்பனை அதிகளவில் நடந்து வருகிறது.
போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க, புறநகர் பகுதிகளில், தனியாக அறை எடுத்து தங்கி வரும் இளைஞர்கள், கல்லுாரி மாணவர்கள் தங்கும் இடங்களில் ரூரல் போலீசார் சோதனை நடத்தி, போதைப்பொருட்கள், ஆயுதங் களை பறிமுதல் செய்து, அவர்களை கைதும் செய்த னர். பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்தனர்.
இதனால், புறநகரில், கஞ்சா, ஸ்டாம்ப், போதை மாத்திரைகள் போன்ற போதைப்பொருட்களின் புழக்கம் பெருமளவு குறைந்தது.
தற்போது, போலீசாரின் கண்காணிப்பு குறையத் துவங்கி விட்டதால், புறநகர் பகுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதற்கு, தனிப்படை போலீசார் முழுமையாக செயல்படாததும், போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை உள்ளதும் முக்கிய காரணங்களாக உள்ளது.
ஏனெனில், மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடு பட்டவர்கள், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை, 6 மாதங்களுக்கு, மாநகர் பகுதியை விட்டு வெளியேற மாநகர போலீஸ் உத்தரவிட்டது.
இதனால், புறநகர் பகுதியில் தங்கியுள்ளனர். மாநகரில் இருந்து புறநகருக்கு வந்த பழைய குற்றவாளிகள் தொடர்பான எந்த தகவல்களும், மாவட்ட போலீசாரிடம் இல்லை. இதனால், அவர்களின் நட வடிக்கைகளை கண்காணிப் பதுமில்லை.
இதுவும், புறநகரில், போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரிப்பதற்கான காரணமாக உள்ளது.
போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, மீண்டும் தனிப்படைகள் அமைத்து கண்காணிக்க வேண்டும். போலீசாரின் தொடர் நட வடிக்கையே, போதைப்பொருட்கள் புழக் கத்தை கட்டுப்படுத்த முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.