sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 40வது ஐ.எம். நார்ம் செஸ் போட்டி 7 புள்ளியுடன் கியூபா வீரர் முதலிடம்

/

 40வது ஐ.எம். நார்ம் செஸ் போட்டி 7 புள்ளியுடன் கியூபா வீரர் முதலிடம்

 40வது ஐ.எம். நார்ம் செஸ் போட்டி 7 புள்ளியுடன் கியூபா வீரர் முதலிடம்

 40வது ஐ.எம். நார்ம் செஸ் போட்டி 7 புள்ளியுடன் கியூபா வீரர் முதலிடம்


ADDED : டிச 24, 2025 05:08 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காந்திபுரம்: காந்திபுரம் அலங்கார் ஹோட்டலில், 40வது தமிழ்நாடு ஐ.எம்., நார்ம் குளோஸ்ட் சர்க்யூட் செஸ் போட்டி கடந்த, 16 முதல், 22ம் தேதி வரை நடந்தது. இதில் வெளிநாட்டை சேர்ந்த ஐந்து பேர், இந்தியாவை சேர்ந்த ஐந்து பேர் என, 10 பேர் பங்கேற்றனர்.

ஒன்பது சுற்றுகளின் நிறைவில், கியூபா வீரர் டயாஸ்மனி ஓடெரோ அகோஸ்டா, 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். பெரு வீரர் கார்லோமக்னோ ஒப்லிடாஸ் மற்றும் இந்திய வீரர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தலா ஆறு புள்ளிகள் பெற்றனர்.

இந்திய வீரர் நிதின் பாபு, கியூபா வீரர் ஜோர்ஜ் மார்கோஸ் ஆகியோர் தலா, 5.5 புள்ளிகள், அர்ஜென்டினா வீரர் ரவுல் கிளவுரி, இந்திய வீரர் சித்தாந்த் பூனஜ் ஆகியோர் தலா, 4.5 புள்ளிகள், கொலம்பியா வீரர் சமன் பாலென்சியா, 2.5 புள்ளிகள், இந்திய வீரர் ஜெய் சங்கர், 1.5 புள்ளியும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ்நாடு மாநில செஸ் சங்க தலைவர் மாணிக்கம் பரிசுகள் வழங்கினார்.






      Dinamalar
      Follow us