/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மெக்சிகன் ஸ்பைடர்' குரங்கு திருவொற்றியூரில் பிடிபட்டது
/
'மெக்சிகன் ஸ்பைடர்' குரங்கு திருவொற்றியூரில் பிடிபட்டது
'மெக்சிகன் ஸ்பைடர்' குரங்கு திருவொற்றியூரில் பிடிபட்டது
'மெக்சிகன் ஸ்பைடர்' குரங்கு திருவொற்றியூரில் பிடிபட்டது
ADDED : செப் 10, 2025 12:28 AM

சென்னை, திருவொற்றியூரில் சுற்றித்திரிந்த, 'மெக்சிகன் ஸ்பைடர்' குரங்கை, வனத்துறையினர் நேற்று பிடித்தனர்.
சென்னை, திருவொற்றியூர் அருகே காலடிப்பேட்டை புது தெருவில் நேற்று இரவு 8:00 மணி அளவில், அரிய வகை குரங்கு ஒன்று சுற்றித்திரிந்தது. இதை பார்த்தவர்கள், காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, வேளச்சேரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காலடிப்பேட்டைக்கு விரைந்து வந்து வனத்துறையினர் 8:45 மணி அளவில் குரங்கை பிடித்து கூட்டில் அடைத்து எடுத்து சென்றனர்.
பிடிபட்ட குரங்கு, 'மெக்சிகன் ஸ்பைடர்' வகையைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது. இந்த குரங்கு எங்கிருந்து வந்தது என வனத்துறையினர் மற்றும் திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.