/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசாரை கண்டித்து வழக்கறிஞர்கள் மறியல்
/
போலீசாரை கண்டித்து வழக்கறிஞர்கள் மறியல்
ADDED : செப் 20, 2025 12:58 AM

சென்னை, போலீசாரை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர் சிவகுருநாதன். இவர், மத்திய குற்றப்பிரிவு மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வாதாடி வந்துள்ளார்.
இந்த வழக்கில் ஆஜராகக் கூடாது என போலீசார் சிவகுருநாதனிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மீண்டும் சிவகுருநாதன் ஆஜரானதால், போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், நேற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் வாசலில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வடக்கு கடற்கரை போலீசார், அவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.