/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.ஒரு கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு
/
ரூ.ஒரு கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு
ADDED : செப் 10, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலி, மணலி மண்டலம், 17வது வார்டு, கொசப்பூர் - அரியலுார் பிரதான சாலையில், அரசுக்கு சொந்தமான, சர்வே எண் 247ல் உள்ள, 10,000 சதுர அடி நிலத்தில், லோகநாதன் என்பவர் லாரி ஷெட் அமைத்து, ஆக்கிரமித்திருந்தார்.
மாநகராட்சி அதிகாரி கள், நேற்று காலை அங்கு சென்று, பொக்லைன் இயந்திரம் உதவியுடன், ஆக்கிரமிப்பில் இருந்த லாரி ஷெட் மற்றும் லாரிகளை அப்புறப் படுத்தி, இடத்தை கையகப்படுத்தினர்.
இதன் மதிப்பு, ஒரு கோடி ரூபாய் என, அதிகாரிகள் கூறினர்.