/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் ரயில்வே மேம்பாலம் திறப்பால் மகிழ்ச்சி
/
சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் ரயில்வே மேம்பாலம் திறப்பால் மகிழ்ச்சி
சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் ரயில்வே மேம்பாலம் திறப்பால் மகிழ்ச்சி
சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் ரயில்வே மேம்பாலம் திறப்பால் மகிழ்ச்சி
ADDED : பிப் 20, 2025 12:10 AM

சிங்கபெருமாள் கோவில் செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில், வளர்ந்து வரும் நகரம் சிங்கபெருமாள் கோவில். இங்கு சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீெபெரும்புதுார் சாலையில் உள்ள ரயில்வே கேட்டை கடந்து சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு சிங்கபெருமாள் கோவில் வந்து செல்கின்றனர்.
மேலும் ஸ்ரீபெரும் புதுார், ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்களும் சென்று வருகின்றன.
இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 2008ம் ஆண்டு ரயில்வே மேம்பால பணிகள் துவங்கப்பட்டன.
கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து ஜி.எஸ். டி.,சாலை எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் , ரவுண்டானா அமைப்பதில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
மீண்டும் 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்டு 138.27 கோடி ரூபாய் மதிப்பில், பணிகள் துவங்கப்பட்டன.
தற்போது தாம்பரம் மார்க்கத்தில் வலது பக்கம் ரயில்வே தண்டவாளத்தை கடந்து, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் வழியில் பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று பாலத்தின் ஒரு பகுதியின் திறப்பு விழா நடந்தது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் முன்னிலையில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு பாலத்தை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு கூறியதாவது:
இந்த ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால் ஒரகடம் பகுதிக்கு செல்லும் கனரக வாகனங்களால் இந்த பகுதியில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல் குறையும்.
பூஞ்சேரி - - சிங்கபெருமாள் கோவில் சாலை அமைக்க நில எடுப்பு பணி 80 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளது. டெண்டர் கோரப்பட்டு வெளிநாட்டு வங்கி உதவியுடன் சாலை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மேம்பாலத்தில் செங்கல்பட்டு மார்க்கத்தில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு முழுதும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

