sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 விழும் நிலையிலுள்ள நீர்த்தேக்க தொட்டி; குண்டுமணிச்சேரி கிராமத்தில் அச்சம்

/

 விழும் நிலையிலுள்ள நீர்த்தேக்க தொட்டி; குண்டுமணிச்சேரி கிராமத்தில் அச்சம்

 விழும் நிலையிலுள்ள நீர்த்தேக்க தொட்டி; குண்டுமணிச்சேரி கிராமத்தில் அச்சம்

 விழும் நிலையிலுள்ள நீர்த்தேக்க தொட்டி; குண்டுமணிச்சேரி கிராமத்தில் அச்சம்


ADDED : டிச 15, 2025 05:49 AM

Google News

ADDED : டிச 15, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்: குண்டுமணிச்சேரி கிராமத்தில், இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பவுஞ்சூர் அடுத்த அடையாளச்சேரி ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஊராட்சிக்கு உட்பட்ட குண்டுமணிச்சேரி கிராமத்தில், விநாயகர் கோவில் தெருவில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தால், கடந்தாண்டு இந்த தொட்டிக்கு அருகே, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

இந்நிலையில், பழைய குடிநீர் தொட்டி அகற்றப்படாமல் உள்ளதால், பலத்த காற்று வீசினால் இடிந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படும் நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us