/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரி அருகே அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் இல்லாததால் அச்சம்
/
ஏரி அருகே அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் இல்லாததால் அச்சம்
ஏரி அருகே அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் இல்லாததால் அச்சம்
ஏரி அருகே அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் இல்லாததால் அச்சம்
ADDED : ஏப் 08, 2024 04:09 AM

பவுஞ்சூர் : பவுஞ்சூர் அருகே தொண்டமநல்லுார் கிராமத்தில், ஊராட்சி அலுவலகம் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 15 குழந்தைகள் படிக்கின்றனர்.
மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 25 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.
இந்த அங்கன்வாடி மைய கட்டடத்தின் பின்புறத்தில் ஏரி உள்ளது. மேலும், இங்கு சுற்றுச்சுவர் வசதி இல்லாததால், நீர்நிலைகள் மற்றும் அருகே உள்ள முட்புதர்களில் இருந்து விஷ பூச்சிகள் வலம் வர வாய்ப்ப உள்ளது.
மேலும், அருகே ஏரி இருப்பதால், குழந்தைகள் விளையாடும் போது, தவறி விழுந்து ஏரியில் மூழ்கும் அபாய நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

