sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புத்தாண்டு நிகழ்ச்சி போட்டிகளில் 2,000 குழந்தைகள் பங்கேற்பு

/

புத்தாண்டு நிகழ்ச்சி போட்டிகளில் 2,000 குழந்தைகள் பங்கேற்பு

புத்தாண்டு நிகழ்ச்சி போட்டிகளில் 2,000 குழந்தைகள் பங்கேற்பு

புத்தாண்டு நிகழ்ச்சி போட்டிகளில் 2,000 குழந்தைகள் பங்கேற்பு


ADDED : ஜன 02, 2024 06:52 AM

Google News

ADDED : ஜன 02, 2024 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புத்தாண்டையொட்டி புதுச்சேரி போத்தீசில் நடந்த போட்டியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமாக பங்கேற்றனர்.

புதுச்சேரி போத்தீஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக புத்தாண்டு தினத்தில் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசு வழங்கி வருகின்றது.

ஐந்தாம் ஆண்டாக நேற்று புத்தாண்டையொட்டி, அண்ணாசாலையில் உள்ள கடை வளாகத்தில் குழந்தைகளின் கற்பனை திறன், போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் விதமாக சதுரங்கம், கேரம் மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இதனால் போத்தீஸ் வளாகமே குழந்தைகளால் நிரம்பி இருந்தது. குழந்தைகள் தீட்டிய ஓவியங்கள் அனைவரும் ரசிக்கும்படியாக இருந்தன. போட்டி முடிவில், குழந்தைகளுக்கு பரிசு தொகுப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுளிப்பு விழா சில தினங்களில் நடைபெறும் என போத்தீஸ் பொது மேலாளர் அருண்மொழி தெரிவித்தார். போட்டி ஏற்பாடுகளை மனிதவள மேலாளர் மகேஷ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us