sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

கொள்கை கூப்பாடு போட்டு ஏமாற்றுவோர்; முதல்வர் மீது விஜய் பாய்ச்சல்

/

கொள்கை கூப்பாடு போட்டு ஏமாற்றுவோர்; முதல்வர் மீது விஜய் பாய்ச்சல்

கொள்கை கூப்பாடு போட்டு ஏமாற்றுவோர்; முதல்வர் மீது விஜய் பாய்ச்சல்

கொள்கை கூப்பாடு போட்டு ஏமாற்றுவோர்; முதல்வர் மீது விஜய் பாய்ச்சல்

12


UPDATED : செப் 15, 2025 10:00 AM

ADDED : செப் 15, 2025 03:33 AM

Google News

12

UPDATED : செப் 15, 2025 10:00 AM ADDED : செப் 15, 2025 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'விஜய் வெளியே வரவே மாட்டான்; மக்களை சந்திக்கவே மாட்டான் என்றவர்கள், இப்போது வெவ்வெறு விதங்களில் புலம்ப துவங்கி உள்ளனர்' என, த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

'உங்கள் விஜய்; நான் வரேன்' என்ற மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்து தந்த, திருச்சியில் துவங்கினோம். எளிதாக கடந்து விடும் துாரத்தை கூட, மக்கள் கடலில், பல மணி நேரம் நீத்தியே, கடக்க வேண்டிய சூழல் இருந்தது. இதை, நாடும் நன்றாகவே உணர்ந்தது. நம் கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளும், இன்னும் ஆழமாக உணர்ந்திருப்பர்.

'விஜய் வெளியே வரவே மாட்டான்; மக்களை சந்திக்கவே மாட்டான்' என, ஆள் வைத்து கதையாடல் செய்தவர்கள், இப்போது, வெவ்வேறு விதங்களில் புலம்பத் துவங்கி உள்ளனர். இதை, முன்கூட்டியே ஒப்புக் கொள்வது போலத்தான், தங்களது கதறலை, முப்பெரும் விழா என்ற கடிதம் வாயிலாக, வெளிப்படுத்தி இருந்தனர்.

புதிய எதிரிகள் என்று பெயர் சொல்லாமல், அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை காண முடிந்தது. வெறுப்பையும், விரக்தியையும் வடிவமைத்த வார்த்தைகள், அந்த கடிதத்தில் அழுது கொண்டிருந்தன. வெளியே கொள்கை என்று பேசுவதும், உள்ளுக்குள்ளே பா.ஜ.,வோடு உறவாடுவதும் யார் என, மக்கள் புரிந்து கொள்ள துவங்கி விட்டனர்.

எனவே, கொள்கை கூப்பாடு போட்டு ஏமாற்றிக் கொண்டே, கொள்ளை அடிப்போர் யார் என்பது மக்களுக்கு தெரியாதா என்ன. எம்.ஜி.ஆரை, அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் என்றும், வெறும் கவர்ச்சியை மாத்திரம் வைத்துக் கொண்டிருப்பவர் என்றும், தங்கள் மனதில் மண்டி கிடந்த வெறுப்பு, நெருப்பை கக்கியவர்கள், இன்று மட்டும் மாறிவிடுவரா? மக்கள் சக்தியுடன் களம் காணும், த.வெ.க.வை எப்படி குறை கூறாமல் இருப்பர்.

யார், எத்தனை கூப்பாடு போட்டாலும், எப்படி கதறினாலும், எத்தகைய வெறுப்பை கக்கினாலும், நாம் முன்னேறி செல்வோம். உயரிய அடிப்படை கோட்பாட்டோடு, மத சார்பற்ற, சமூக நீதி என்ற மகத்தான கொள்கையோடு, பாதை வகுப்போம். 2026 சட்டசபை தேர்தலில் 1967 மற்றும் 1977 தேர்தல்களில், நிகழ்ந்ததை போல, மிகப்பெரிய வெற்றியை மக்கள் சக்தியின் பேராதரவுடன், த.வெ.க. நிச்சயம் நிகழ்த்திக் காட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெரம்பலூருக்கு மீண்டும் வருவேன்

விஜய் வெளியிட்ட மற்றொரு அறிக்கை: நமது மக்கள் சந்திப்பு பயணம், தித்திப்புடன் திருச்சியில் துவங்கியது. தொடர்ந்து, அரியலுார், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பு, மனம் நெகிழச் செய்தது. அனைவருக்கும் கோடானு கோடி நன்றி. இந்த உணர்வுமிக்க நிகழ்ச்சிக்கான பணிகளை மேற்கொண்ட, த.வெ.க., மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
வழிநெடுகிலும், மிக நீண்ட துாரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலை. எனவே, நேற்று முன்தினம் நள்ளிரவு கடந்தும், பெரம்பலுாரில் நம்மை சந்திக்க கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளைக் காண இயலாத சூழல் ஏற்பட்டது.
எனவே, மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலுார் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உருவானது. பேரன்பு கொண்டு காத்திருந்த, பெரம்பலுார் மக்களிடம், என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக, உங்களை சந்திக்க மீண்டும் வருவேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us