sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 அ.தி.மு.க.,வினரிடம் ஆர்வம் இல்லையா? விருப்ப மனு அவகாசம் 31 வரை நீட்டிப்பு

/

 அ.தி.மு.க.,வினரிடம் ஆர்வம் இல்லையா? விருப்ப மனு அவகாசம் 31 வரை நீட்டிப்பு

 அ.தி.மு.க.,வினரிடம் ஆர்வம் இல்லையா? விருப்ப மனு அவகாசம் 31 வரை நீட்டிப்பு

 அ.தி.மு.க.,வினரிடம் ஆர்வம் இல்லையா? விருப்ப மனு அவகாசம் 31 வரை நீட்டிப்பு

2


ADDED : டிச 27, 2025 04:45 AM

Google News

2

ADDED : டிச 27, 2025 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனு பெறுவதற்கான காலக்கெடு, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, அக்கட்சி பொதுச் செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனு வினியோகம், கடந்த 15 முதல் 23ம் தேதி வரை நடந்தது; 9 ஆயிரம் பேர், தலா 15,000 ரூபாய் செலுத்தி, விருப்ப மனுக்கள் பெற்றதாக தெரிகிறது.

இந்நிலையில் பழனிசாமி, நேற்று வெளியிட்ட அறிக்கை:


அ.தி.மு.க., சார்பில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு, நிர்வாகிகளும், தொண்டர்களும் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்று கால நீட்டிப்பு செய்யப்படுகிறது; நாளை முதல் வரும் 31ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம்.

காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இருந்த வரை, அ.தி.மு.க., சார்பில் தேர்தலில் போட்டியிட, கட்சியினர் போட்டி போட்டு விருப்ப மனு அளிப்பர். கடந்த 2011, 2016 சட்டசபை தேர்தல்களில், தொடர்ந்து அ.தி.மு.க., வென்று ஆட்சி அமைத்தது.

அப்போது, 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்தனர். அதிலும், 234 தொகுதிகளிலும், ஜெயலலிதா போட்டியிடுவற்காக, ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு அளிப்பது வழக்கமாக இருந்தது.

இப்போது, எடப்பாடி தொகுதியில் பழனிசாமி போட்டியிட, மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட சில நுாறு பேர் மட்டுமே மனு அளித்துள்ளதாக தெரிகிறது.

கடந்த 23ம் தேதி, காலக்கெடு முடிந்த நிலையில், 9 ஆயிரம் பேர் வரைதான் விருப்ப மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விருப்ப மனு பெறுவதற்கான அவகாசம், வரும் 31ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us