sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பல நோய்களுக்கு காரணம் செயற்கை உரம்: அமித்ஷா பேச்சு

/

பல நோய்களுக்கு காரணம் செயற்கை உரம்: அமித்ஷா பேச்சு

பல நோய்களுக்கு காரணம் செயற்கை உரம்: அமித்ஷா பேச்சு

பல நோய்களுக்கு காரணம் செயற்கை உரம்: அமித்ஷா பேச்சு

4


ADDED : டிச 25, 2025 08:22 PM

Google News

4

ADDED : டிச 25, 2025 08:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போபால்: '' பல நோய்களுக்கு காரணம் செயற்கை உரம் காரணம் காரணம் எனவும், இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

ம.பி., மாநிலம் ரேவா என்ற இடத்தில் நடந்த இயற்கை வேளாண்மை குறித்த மாநாட்டில் அமித்ஷா பேசியதாவது: மண் முதல் ஆய்வக சோதனை வரையிலும், உலக சந்தைக்கு சென்றடையும் வகையில் செய்ய மத்திய அரசு ஒரு முழுமையான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.

இன்று பல நோய்களுக்கு மூல காரணமாக ரசாயன உரங்கள் உள்ளன. இதற்கு மாற்றான இயற்கை விவசாயம், விவசாயிகளின் வருமானத்தை குறைக்காது. மாற்றாக, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள் தூய்மையானதாக இருக்கும். இயற்கை விவசாயம் வருமானத்தை அதிகரிக்கும். தண்ணீரை மிச்சப்படுத்தும். மக்களை நோய்களில் இருந்து விடுவிக்கும்.

நாடு முழுவதும் 40 லட்சம் விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறி உள்ளனர். எனது சொந்த நிலத்திலும் இயற்கை விவசாயத்தை செய்துள்ளேன். உற்பத்தி குறையவில்லை. அதிகரித்துள்ளது.

இயற்கை விவசாயத்துக்கு உலகளவில் பெரிய சந்தை உள்ளது. இந்திய விவசாயிகள் தயாரிக்கும் பொருட்கள் உலக சந்தையை சென்றடைவதற்கான முழுமையான அமைப்பு ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



முன்னதாக போபாலில் நடந்த செமி கண்டக்டர் தொடர்பான மாநாட்டில் அமித்ஷா பேசியதாவது: செமி கண்டக்டர் துறையில் இந்தியா வலிமையாக நுழைந்துள்ளது. ஆனால், தாமதமாக நுழைந்துள்ளோம். இருப்பினும், செமி கண்டக்டர் துறையில் இந்தியா தன்னிறைவு பெறுவதுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் எனத் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us