
உலர்ந்த திராட்சை பழத்தை பசும்பாலில் ஊறவைத்து பிழிந்து, அந்தச் சாற்றை வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்து வர, மலச்சிக்கல் தீரும்
* எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில், ஒரு தேக்கரண்டி அளவு மிளகையும் கலந்து வெயிலில் காயவைத்து, காய்ந்த பின், நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். காலை, மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு எடுத்து வாயிலிட்டு வெந்நீர் குடித்து வர, பித்தம் குறையும்
* முருங்கை இலையை இடித்துச் சாறு பிழிந்து கொஞ்சம் சுண்ணாம்பு சேர்த்து தொண்டையின் வெளிபுறம் பூசினால், தொண்டைக்கமறல் குணமாகும்
* சாதாரண வாயுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்
* வாய்ப்புண் எளிதில் குணமாக, சப்ஜா விதையை முதல் நாள் இரவே தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, பிறகு வடிகட்டி, அத்துடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து தினம், மூன்று வேளை அருந்தினால் விரைவில் குணமாகும்.

