உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கருப்பு' வெற்றி: ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் நன்றி சொன்ன சூர்யா

'கருப்பு' வெற்றி: ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் நன்றி சொன்ன சூர்யா


ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடித்த 'கருப்பு' படம் நேற்று முன்தினம் வெளியானது. படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் சூர்யாவுக்கு வெற்றிப் படமாக அமையலாம் என தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சூர்யா, எக்ஸ் தளத்தில் ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு, பதிவும் போட்டுள்ளார். அதில்,

“உலகம் முழுவதிலுமிருந்து எங்களுக்குக் கிடைக்கும் அன்பு, பெயர் மற்றும் புகழ் அனைத்தும், நம்பிக்கை வைத்து கடினமாக உழைத்த கருப்பு படத்தின் முழு நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கே சேரும். ட்ரீம் வாரியர் எஸ். ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோரின் ஆதரவுடன்.

அன்புள்ள கலைவாணன் படத்தொகுப்பை இறுதி செய்யும் வரை எங்கள் படத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்தியதற்கு நன்றி. உங்கள் பச்சிளம் குழந்தையுடன் எங்கள் வேலையையும் சமன் செய்தீர்கள், மிக்க நன்றி.

சாய்! உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. உங்களுக்குக் கிடைக்கும் அன்பைக் கண்டு மகிழ்ச்சி. திரையரங்குகளில் எங்கள் படம் இந்த அளவு உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் பெறுவதற்கு நீங்கள்தான் முதுகெலும்பு.

ஜி கே விஷ்ணு பாவா! படப்பிடிப்பின் போது என் மீது நீங்கள் வைத்திருந்த அளவற்ற அன்புக்கு மரியாதை. நீங்களும் உங்கள் குழுவும் உங்கள் சிறந்ததை வழங்க இரவும் பகலும் உழைத்தீர்கள். உங்கள் அன்புதான் கருப்பு படத்தின் 'மாயத் தூள்'.

ஆர் ஜே பாலாஜி , எனக்கு ஒரு பிளாக்பஸ்டர் தருவதாக உறுதியளித்தீர்கள், அதை வழங்கியதன் மூலம் அனைவரின் அன்பையும் பெற்றுள்ளீர்கள். உங்கள் நனவாக்கும் சக்திக்கு மரியாதை. மேலும் பிரகாசியுங்கள்”, எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !