கொச்சி அழகும்... பின்னே ராஷ்மிகா மந்தனா பதிவும்…
இந்தியத் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது 'மைசா' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இதன் அடுத்த கட்டப் படப்பிடிப்பு கேரளாவின் கொச்சி நகரில் நடைபெற்று வந்தது. அதைத் தற்போது நிறைவு செய்துள்ளார்கள்.
கொச்சி நகரைப் பற்றி ராஷ்மிகா அவரது சமூக வலைத்தளத்தில், “கொச்சியில் நிறைய காடுகள், பூச்சிகள், நீர்வீழ்ச்சிகள், மலையேற்றம், அடிப்படை உடற்பயிற்சிகள், மழை, ஓடியாடித் திரிதல், சண்டைக் காட்சிகளைக் கற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துதல், என் கணுக்கால்களுக்கும் முழங்கால்களுக்கும் கட்டு போடுதல், உயரத்தைக் கண்டு எனக்குள்ள பயத்தை எதிர்கொள்ளுதல், அனைத்தும் சிறப்பாக நடந்தேறும் என்று நம்புதல், அங்கங்கே நடந்து செல்லும்போது கவனமாக இருக்குமாறு சக ஆண் மற்றும் பெண் தோழர்களுக்கு அறிவுறுத்துதல், அதிக நேரம் தூங்கிவிடாமல் இருக்க உரத்த ஒலி எழுப்பும் அலாரம் வைத்து விழித்தெழுதல் — இவற்றுடன், கொஞ்சம் 'பழம் பொரி'... சொல்லப்போனால், நிறையவே 'பழம் பொரி' சாப்பிட்டேன்!
சுருக்கமாகச் சொன்னால், இவ்வளவுதான்!,” என்று தனது கொச்சி அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.