ஆர்பி சவுத்ரி ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினிகாந்த்?
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி, ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவருடைய உடல் நல்லடக்கம் சற்று முன் நடைபெற்றது. அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் ரஜினிகாந்த், ஆர்பி சவுத்ரி தயாரிக்க இருந்த 100வது படத்தில் என்னை நடிக்க வேண்டும் என்று கேட்டார் என கூறியிருந்தார்.
ஆர்பி சவுத்ரி தயாரிப்பில் ரஜினிகாந்த் ஒரு படம் கூடி நடித்ததில்லை. ஆனால், அவருடன் பழகிய நட்புக்காக வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது ஆசையை ரஜினிகாந்த் நிறைவேற்றி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவர் பேசியதற்குப் பிறகு எழுந்துள்ளது.
எப்போதுமே தயாரிப்பாளர்களை மதிக்கக் கூடியவர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்தியவர். அப்படி அவர் அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவரான கேஎஸ் ரவிக்குமார், ரஜினிகாந்த் நடித்த பெரும் வெற்றிப் படங்களான, “முத்து, படையப்பா” ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.