
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடுகடுத்த எண்ணம், பேச்சினை அறவே கைவிடுங்கள். அனைவரிடமும் அகம் குளிர முகமலர்ச்சியுடன் பழகுங்கள்.
* கனவிலும் வஞ்சனை எண்ணம் இல்லாதநல்லவருக்கே கடவுளின் அருள் கிட்டும்.
* கடவுளின் கருணைக்கு நிகரான கருணை வேறில்லை. அவரை வாழ்த்தி வணங்கினால் எல்லாம் நலமாக அமையும்.
* கொடுமையான நோன்பு இருப்பதைக் காட்டிலும் உயிர்களைக் கொல்லாமையே விரதங்களில் சிறந்தது.
* பிறரைக் குறை சொல்லாமல், நாம் நடக்கும் வழியில் குற்றம் நேராமல் பார்த்துக் கொள்வது நல்லது.
- வள்ளலார்