ADDED : பிப் 01, 2017 11:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இழந்த தங்கத்தைக் கூட திரும்ப சம்பாதிக்க முடியும். ஆனால் காலத்தை வீணாக்கினால் திரும்ப கிடைக்காது.
*தன்னலம் கருதாத தொண்டு என்பது, கலப்படம் இல்லாத தங்கம் போல மதிப்பு மிக்கதாகும்.
* கடவுளைச் சிந்திக்கும் மனம், பூவிலுள்ள தேனை மட்டும் உண்ணும் தேனீ போல தூய்மையாக இருக்கும்.
* ஆயிரம் நூல்களைப் படிப்பதை விட, ஒரு நல்ல நூலின் கருத்துக்களைப் பின்பற்றி நடப்பது மேலானது.
- சாய்பாபா