ADDED : டிச 05, 2011 09:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* யார் ஒருவன் உண்மையாக நடக்கிறானோ, அவன் தினமும் தவறாமல் கடவுளைப் பிரார்த்திக்கிறான் எனப்பொருள்.
* பிரார்த்தனை செய்யும் முன் கடவுளின் குணாதிசயங்கள், சக்தி, அருளின் மேன்மை ஆகியவற்றை உணர்ந்தால் தான் அவரது அருளாசியைப் பெற முடியும்.
* பஞ்சபூதத்தால் ஆன இயற்கை, இறைவனின் சொரூபமாக விளங்குகிறது. இயற்கையைப் பாதுகாத்தால் இறைவனை வழிபட்டவர் ஆவோம்.
* நல்ல விஷயங்கள் நல்லோர் சொல்லிக் கேட்பது நம்மை உயர்வடையச் செய்யும். எப்போதும் இனிமையாக, நல்ல விஷயங்களையே பேசுவது நம்மை முன்னேறச் செய்யும்.
* ஒருவரை ஒருவர் வெறுப்பதை நிறுத்துங்கள். எல்லாரிடமும் அன்புகாட்டி பழகுங்கள்.
* கடவுளின் நாமத்தை சொன்னால் மட்டும் போதாது. மக்களிடம் கலந்து பழகி அவர்களுடைய சுகதுக்கங்களில் பங்கு கொள்ள வேண்டும். எளியவர்களுக்கு உதவ வேண்டும்.
- சாய்பாபா