ADDED : ஜூன் 01, 2014 10:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எளிய உணவை அளவாகச் சாப்பிடுங்கள். தேவைக்கு அளவாக மட்டும் பேசுங்கள். அதுவும் இனிமையாக இருக்கட்டும்.
* சேமித்த பணம் வறுமையில் பயன் அளிக்கும். சேர்த்து வைத்த புண்ணியமோ மறுமையிலும் துணை நிற்கும்.
* எனக்கு எல்லாம் நீயே! உன்னையே எனக்கு கொடு என்று கடவுளிடம் மன்றாடி வழிபடுங்கள்.
* தீய எண்ணம் படைத்தவன் செலுத்தும் பக்தியை கடவுள் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை.
* இளமையும், செல்வமும் நிரந்தரமானவை அல்ல. உலகில் சத்தியம் ஒன்றே என்றென்றும் அழியாதது.
- சாய்பாபா