/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
கிருஷ்ண பிரேமி சுவாமி
/
இறைவனைக் காண முடியுமா?
/
இறைவனைக் காண முடியுமா?
ADDED : அக் 19, 2009 04:36 PM

<P>* ரோஜாவிடம் பூவினை மட்டும் பறிக்கவேண்டும். அதிலுள்ள முள்ளைப் பார்க்க வேண்டியதில்லை. அதுபோல, படிக்கும் சாஸ்திரங்களில் இருந்து சாரமானதை எடுத்துக் கொள்ள வேண்டும். வேண்டாதவற்றைத் தள்ளி விட வேண்டும். </P>
<P>* கடலில் ஒரு அலையைத் தொடர்ந்து இன்னொரு அலை கிளம்பிக் கொண்டே இருக்கும். அதுபோல, குதர்க்கவாதிகளின் மனதில் சந்தேக அலை அடித்தவண்ணமே இருக்கும். <BR>* உடலுக்குள் இருக்கும் உயிரையையே யாராலும் காண முடியவில்லை. அப்படியிருக்க உயிருக்கும் உயிரான இறைவனை யார் தான் காண முடியும்? உடலின் அசைவைக் கொண்டு உயிர் இருப்பதை உணர்கிறோம். அதுபோல, உலக இயக்கத்தைக் கொண்டு இறைவனை உணரலாம். <BR>* மண்ணில் தோன்றிய அனைத்தும் மண்ணுக்குள்ளே மறைந்து விடும். அதுபோல உலகம் பரம்பொருளான இறைவனிடமே தோன்றி இறைவனிடமே மறைந்து விடுகிறது. <BR>* சத்தியமே இறைவனின் வடிவம். சத்தியத்தை புறக்கணிப்பவன் யாராக இருந்தாலும் இறைவனைப் புறக்கணிப்பவன் ஆவான். <BR>* ஈரமண்ணில் செடி வளரும். காய்ந்த மண்ணில் துளிர்க்காமல் பட்டுவிடும். அதுபோல இரக்கம் உள்ள மிருதுவான இதயத்தில் தான் பக்திப்பயிர் வளரும். கல்நெஞ்சில் பக்திக்கு சிறிதும் இடமில்லை.<BR>* காற்றுக்கு உலர்த்துவது தர்மம். நெருப்புக்கு சுடுவது தர்மம். தண்ணீருக்கு நனைப்பது தர்மம். அதுபோல, மனிதனுக்கு கட்டுப்பாடு தான் தர்மம். <BR><STRONG>-கிருஷ்ணப்ரேமி சுவாமி</STRONG></P>