/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
எந்த செயலுக்கு பலனுண்டு?
/
எந்த செயலுக்கு பலனுண்டு?
ADDED : ஜூன் 21, 2013 10:06 AM

* மனம் இடைவிடாமல் எதை தீவிரமாகச் சிந்திக்கிறதோ, அதுவாகவே மாறிவிடும் தன்மை கொண்டது.
* பிறருக்கு எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவதில் தான் பெருமை இருக்கிறது.
* மனிதன் எந்தநிலையில் இருந்தாலும் கடவுளின் அருட்குணங்களைக் கேட்பதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.
* பெரும்பாலும் கோபத்தினால் நமக்கு நாமே தீங்கு செய்து கொள்கிறோம். அதனால், கோபத்தை அறவே கைவிடுவது நல்லது.
* கடவுளை நினைத்துச் செய்யும் எந்த செயலுக்கும் பலனுண்டு. அறியாமல் செய்தாலும் கூட அதற்கும் பலன் கிடைத்துவிடும்.
* தர்மம், நீதி இரண்டும் சேர்ந்தது தான் பண்பு. பண்பில்லாதவன் மனிதநிலையிலிருந்து தாழ்ந்து விடுகிறான்.
* எந்த விஷயத்தையும் அலட்சியத்துடன் அணுகக்கூடாது. அக்கறையுடன் செய்யும் செயல் தான் வெற்றி பெறும்.
- காஞ்சிப்பெரியவர்