/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
கடவுளின் திருவடியை நினை!
/
கடவுளின் திருவடியை நினை!
ADDED : ஜூன் 30, 2013 05:06 PM

* மன அடக்கத்துடன் செயல்படுங்கள். பிறர் போற்றும்விதத்தில் எடுத்துக் காட்டாக வாழுங்கள்.
* யாரையும் அலட்சியமாக எண்ணக்கூடாது. கடவுளின் அருட்குணங்களை நினைத்து நம்மால் முடிந்த உதவியை பிறருக்குச் செய்ய வேண்டும்.
* தேவையை அதிகப்படுத்திக் கொண்டே சென்றால் பேராசை தான் மிஞ்சும். அப்போது மனநிம்மதி கானல் நீராகி விடும்.
* வாழ்க்கை லாபநஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல. பிறர் கஷ்டத்தை நம்மால் போக்க முடிந்தால் அதுவே பிறவிப்பயன்.
* எந்த இடத்தில் இருந்தாலும், எந்த பணியில் ஈடுபட்டாலும் மனம் கடவுளின் திருவடிகளையே சிந்தித்துக் கொண்டிருக்கட்டும்.
* மனதிலிருக்கும் அசுத்தத்தை அகற்றுங்கள். அது தானாகவே கடவுளின் பக்கம் திரும்பி விடும்.
* திருடுதல், வஞ்சித்தல், லஞ்சம் பெறுதல், உழைப்பை சுரண்டுதல் இவையேதும் இல்லாமல் நேர்மையான வழியில் உழைத்து சம்பாதிப்பதே நிலைக்கும்.
- காஞ்சிப்பெரியவர்