
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இறைவன் நமக்கு கை, கால் என எல்லா உறுப்புகளையும் கொடுத்திருக்கிறார். இவற்றைக் கொண்டு நன்றியுணர்வுடன் நாலு பேருக்கு நன்மையை மட்டும் செய்ய வேண்டும்.
* மனிதனுக்கு ஒழுக்கம் முக்கியமானது. வாழ்வில் ஒழுங்கு வந்துவிட்டால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அதன் அழகும், நேர்த்தியும் வெளிப்படத் தொடங்கும்.
* வேத விருட்சம் நன்றாக விழுது விட்டு வளர்ந்த மண் நம் தமிழ்மண். வேதம் நிறைந்த தமிழ்நாடு என்று பாரதி பாடியிருக்கிறார்.
* நாம் எப்படி வாழ நினைக்கிறோமோ அப்படியே உலகிலுள்ள எல்லோரும் வாழ வேண்டும் என்று நினைப்பது தான் உத்தமமான எண்ணம்.
* எளிமையாக வாழ்வதே உலகிற்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி. நம்மைப் பார்த்து பிறர் பொறாமைப்பட ஆடம்பரமாக வாழ்வது கூடாது.
* உணவு, உடை, உறைவிடம் அனைவருக்கும் கிடைத்தால் போதும். மற்றவை எல்லாம் ஆடம்பரம் தான்.
- காஞ்சிப்பெரியவர்