
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பாவச் செயலில் ஈடுபடாதவர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. தைரியம் அவர்களின் முகத்தில் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.
* தர்மத்தைச் செய்தால் பலனை எதிர்பார்ப்பது கூடாது. பலன் தரவேண்டியது கடவுளின் வேலை.
* கடவுள் கடலுக்கு ஒப்பானவர். நதிகளைப் போல தன்னிடம் நாடிவரும் பக்தர்களை எதிர்கொண்டு அழைத்துக் காக்கிறார்.
* நம்முடைய துன்பத்தையே பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கக் கூடாது. நம்மால் முடிந்த சிறு நன்மையையாவது உலகிற்குச் செய்ய வேண்டும்.
* சிலைகளை ஆராதிப்பதுபோல, கண்கண்ட தெய்வமாக விளங்கும் சூரியனையும் தினமும் காலையில் வணங்க வேண்டும்.
* நிலையாமையை நினைவூட்டுவது தான் நெற்றியில் பூசும் திருநீறும், திருமண்ணும் ஆகும்.
* மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், நிலையான உண்மையான கடவுளின் திருவடிகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர்