
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் இங்கு பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தப்படும்.
ஒரு காலத்தில் மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன், மைசூரு சாமுண்டீஸ்வரியை ஒன்பது நாள் இரவு நேரத்தில் சென்று வணங்குவது வழக்கம். பத்தாவது நாளில் போருக்கு புறப்பட்டுச் செல்வர். இதன்மூலம் தேவியருளால் வெற்றி வாகை சூடுவர். மைசூருவில் தசரா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதை 'தஸ் ராத்'என்பர்.
இதற்கு 'பத்து இரவுகள்' என்று பொருள். இந்தச் சொல்லே திரிந்து 'தசரா' எனப்படுகிறது.