ADDED : செப் 19, 2025 07:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருமுறை நாரதர் சத்திய லோகத்தில் தங்கியிருந்தார். அங்கு பிரம்மாவிடம், “கலியுகத்தில் கடைபிடிக்க வேண்டிய சிறந்த விரதம் எது?'' எனக்கேட்டார்.
“திருப்பதி ஏழுமலையானுக்கு இருக்கும் புரட்டாசி சனி விரதமே சிறந்தது” என்றார். இதன் பின்னர் பூலோகத்தில் மக்கள் விரதத்தை பின்பற்றத் தொடங்கினர்.இதற்காக புரட்டாசி சனியன்று காலையில் நீராடி துளசி நீரை பருகி விரதமிருக்கத் தொடங்குவர்.
புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் என கலவை சாதங்களை நைவேத்யமாக வைத்து வழிபடுவர். சிலர் புரட்டாசி முழுவதும் விரதம் மேற்கொள்வதும் உண்டு. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஏழுமலையானுக்கு புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் கிரகதோஷம் தீரும். ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும். செல்வம் பெருகும்.