PUBLISHED ON : மார் 16, 2026 07:40 PM

காஷ்மீர்,ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டதை அடுத்து, வண்ணமயமான மலர்களைக் கண்டு ரசிக்கத் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களும் திரண்டு வருகின்றனர்.
இவை ஆசியாவைத் தாயகமாகக் கொண்டவை. ஸ்ரீநகரில் உள்ள இந்தத் தோட்டம், ஆசியாவிலேயே மிகப்பெரிய துலிப் தோட்டமாகும். இது ஜபர்வான் மலைத்தொடரின் அடிவாரத்தில், உலகப்புகழ் பெற்ற தால் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. சுமார் 30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இத்தோட்டத்தில் பல லட்சம் துலிப் மலர்கள் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும்.




