PUBLISHED ON : ஜன 15, 2025 12:00 AM


துாத்துக்குடி எம்.பி.,கனிமொழிக்கு நாட்டுப்புற கலைஞர்கள் மீது எப்போதுமே தனிப்பிரியம்,அவர்களை ஒருங்கிணைத்து உரிய மரியாதையும், ஊதியமும் கொடுத்து அவர் நடத்திய சென்னை சங்கமம் நிகழ்ச்சி சென்னை மக்களுக்கு ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகும்.
தமிழகத்தில் உள்ள ஒயிலாட்டம்,கரகாட்டம்,காவடியாட்டம் உள்ளீட்ட நாட்டுப்புற கலைஞர்கள் என்ற ஆயிரத்து ஐநுாறு பேர் சென்னையில் குழுமியுள்ளனர்.
இவர்கள் வருகின்ற 18 ம் தேதி வரை சென்னையில் பரவலாக மக்கள் கூடும் பூங்கா போன்ற இடங்களில் தங்களது கலைகளை வெளிப்படுத்துவர்.
இடைவெளி இல்லாமல் பல்வேறு கலைஞர்கள் வந்து தங்களது திறமையை வெளிப்படுத்திச் சென்றனர்.திருநங்கைகள்,காது கேளாதோர் ஆகியோரது நடனங்களும் இடம் பெற்றது,வள்ளலார் ராப் என்ற ராப் பாடல்களும் பாடப்பட்டது.சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த துவக்கவிழாவின் அதிர்வுகள் இப்போது சென்னை முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
வாய்ப்பு உள்ளவர்கள் தென்மாவட்ட மக்களின் கலை கலாச்சாரங்களை கண்டு ரசிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள்
-எல்.முருகராஜ்

