sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

ஆடுகளம்

/

திறமையை நிரூபிக்க கூடைப்பந்து வீராங்கனை ஆன சஞ்சனா ரமேஷ்

/

திறமையை நிரூபிக்க கூடைப்பந்து வீராங்கனை ஆன சஞ்சனா ரமேஷ்

திறமையை நிரூபிக்க கூடைப்பந்து வீராங்கனை ஆன சஞ்சனா ரமேஷ்

திறமையை நிரூபிக்க கூடைப்பந்து வீராங்கனை ஆன சஞ்சனா ரமேஷ்


ADDED : மே 09, 2025 12:52 AM

Google News

ADDED : மே 09, 2025 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற பழமொழி உண்டு. இதன் அர்த்தம் அமைதியாக இருப்பவர்களை சீண்டி விட்டு, அவர்கள் ஏதாவது செய்தால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பது தான். இந்த பழமொழிக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர், பெங்களூரை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை சஞ்சனா ரமேஷ், 24.

கோனனகுன்டேயை சேர்ந்த சஞ்சனாவின் சகோதரர் கால்பந்து விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர். சகோதரரை பார்த்து கால்பந்து விளையாட வேண்டும் என்ற ஆர்வம் சஞ்சனாவுக்கும் ஏற்பட்டது. ஆனால், அவர் படித்த பள்ளியில் கால்பந்து அணி இல்லை.

'உனது பள்ளியில் தான் கால்பந்து அணியே இல்லையே; நீ எப்படி கால்பந்து விளையாடுவாய்' என்று சஞ்சனாவிடம் அவரது சகோதரர் கிண்டலாக கூறி உள்ளார். தனது ஆர்வத்தை ஏதாவது ஒரு விளையாட்டில் நிரூபித்து காட்டுவதாக கூறிய சஞ்சனா, பள்ளியில் கூடைப்பந்து அணியில் சேர்ந்து உள்ளார்.

பள்ளி அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால், தேசிய அளவில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2017 ம் ஆண்டு 16 வயதுக்கு உட்பட்டோருக்கான, பெண்கள் கூடைப்பந்து அணியின் கேப்டனாக சஞ்சனா நியமிக்கப்பட்டார்.

சிறப்பாக விளையாடியதால், கோல்டன் ஈகிள் ஸ்காலர்ஷிப் அவருக்கு கிடைத்தது. இந்த உதவி தொகையை பெறும், இரண்டாவது இந்திய பெண் கூடைப்பந்து வீராங்கனை என்ற பெயரும் அவருக்கு கிடைத்தது.

மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற போது, வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்திற்கு விளையாடவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சீனாவில் ஹாங்சோவில், 2022ல் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், இந்திய பெண்கள் அணிக்காகவும் விளையாடினார். தற்போது வடக்கு அரிசோனா லம்பர்ஜாக்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

சகோதரரிடம் தனது திறமையை நிரூபிக்க கூடைப்பந்து விளையாடிய சஞ்சனா, தற்போது உலகம் முழுதும் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us