நெதர்லாந்து... துலிப் பூக்களின் நிலம் இது !

ஐரோப்பிய நாடான நெதர்லாந்து 'துலிப் பூக்களின் நிலம்' என அழைக்கப்படுகிறது.

உலகில் துலிப் பூக்களின் ஏற்றுமதியில் இந்நாடு முதலிடத்தில் இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

மார்ச் - மே மாதத்தில் துலிப் மலர்கள் பூத்துக் குலுங்கும்.

உலகில் துலிப் ஏற்றுமதியில் 2, 3வது இடத்தில் சீனா, பெல்ஜியம் உள்ளன.

துலிப் மலர் என்பது சிவப்பு, ஆரஞ்சு, பிங்க், மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட பல வண்ணங்களில் பூக்கின்றன. இதில் பல வகைகள் உள்ளன.

ஆசியாவின் பெரிய துலிப் மலர் தோட்டம் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ளது. இதன் பரப்பளவு 74 ஏக்கர்.