சளி, இருமலுக்கு நிவாரணம் தரும் வெற்றிலை ரசம்...!
தேவையானப் பொருட்கள்: வெற்றிலை - 4, பூண்டு - 10 பல், புளி - எலுமிச்சை அளவு, தக்காளி - 2, பெருங்காயம் - 1/2 சிட்டிகை, மஞ்சள் தூள்: 1 சிட்டிகை.
கடுகு, மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, இஞ்சி - 1 துண்டு, கறிவேப்பிலை -2 கொத்து, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
ஒரு பாத்திரத்தில் ரசம் வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீரை எடுத்துக் புளியை கரைத்துக் கொள்ளவும்.
அதில், இஞ்சி, சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் தூள், ஆகியவற்றை இடித்துச் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொதிக்க விடவும்.
இதில், வெற்றிலையையும் சிறு துண்டுகளாக சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால், சளி, இருமலுக்கு இதமான வெற்றிலை ரசம் ரெடி.
நுரை கட்டியவுடனேயே ரசத்தை இறக்கிவிடவும். மிகவும் கொதித்தால் அதன் சுவை குறைந்துவிடும்.