சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் கூடும் இடங்களில் கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. திருநெல்வேலி பழைய பஸ் நிலையம் அருகே நடந்த கலைநிகழ்ச்சி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..