மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து தனியாக பிரித்து ஆந்திரா உருவாக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த, சுதந்திர போராட்ட தியாகி பொட்டி ஸ்ரீ ராமுலுவின் 58 அடி உயர வெண்கல சிலையை மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். இடம்: அமராவதி.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.