திருவெண்ணெநல்லூர் அடுத்த பாவந்தூர் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி, தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை அடைக்காததால் வீடு ஜப்தி செய்யப்பட்டது. இதனை கண்டித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.