காஞ்சிபுரம் திருக்காலிமேடு அருந்ததியர் நகர் 2வது தெருவில் கழிவுநீர் கால்வாய் மண் திட்டுகளால் தூர்ந்து இருந்தது. இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மண் திட்டுகளால் தூர்ந்த கால்வாயை தூர்வாரி சீரமைத்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..