சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை துவக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 20 பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இதை முன்னிட்டு பட்டினம்பாக்கத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..