உலக நாயகன் கமல் ஹாசன், 'தினமலர் வாரமலர்' அந்துமணியின் அபிமான வாசகர். இவருக்கு மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், அந்துமணியின், 'பார்த்தது கேட்டது படித்தது' நூலை வழங்கினார். இடம்: ராஜ்கமல் இன்டர்நேஷனல் அலுவலகம், ஆழ்வார்பேட்டை, சென்னை.
யுகாதி பண்டிகையை முன்னிட்டு உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தில் ஸ்ரீ ஜமதக்னி மகரிஷி ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் திருமண கோலத்தில் அருள்பாலித்தனர்.
வசந்த காலத்தின் துவக்கத்தை யுகாதி புத்தாண்டாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். இனிய புத்தாண்டை பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கல்லூரி மாணவியர் விளக்கேற்றி வரவேற்றனர்.
மேற்காசிய நாடான லெபனானின் பெய்ரூட் நகரில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய சரமாரி வான்வழி தாக்குதலில், 22 மாடி கட்டடம் ஒன்று படிப்படியாக நொறுங்கி விழுந்து தரைமட்டமானது..