உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஓடும் யமுனை நதியை பெண் தெய்வமாக கருதி, ஆண்டிற்கு ஒரு முறை பல வண்ண புடவைகளால் அலங்கரித்து அப்பகுதி மக்கள் வழிபடுவது வழக்கம். 'சூன்ரி மனோரத் சேவா' எனப்படும் இந்த விழாவிற்காக, 200க்கும் அதிகமான புடவைகள் பயன்படுத்தப்பட்டன.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..