திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவின் 7வது நாளன்று நடைபெறும் தேரோட்டத்தில் பெண்கள் மட்டுமே இழுக்கும் பராசக்தி அம்மன் தேர், 71 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கும் பணி முடிந்து வெள்ளோட்டம் நடந்தது. ஏராளமான பெண்கள் தேரை இழுத்து வழிபட்டனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..