சேலம் மாவட்டம் மேட்டூர் அணை 16 கண் மதகில் அக் 27ல் உபரி நீர் திறப்பை நிறுத்திய நிலையில், அப்பகுதியில் உள்ள குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த ஏராளமான மீன்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் செத்து மிதந்தன.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..